Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Monday, January 27, 2014

அப்பா பேர் கெடாம பாதுக்கொனு

அம்மா: டே ஏன்டா அப்பா பேர பேபெர்ல எழுதி பிரிட்ஜ்ல வைக்கிற?
மகன்: நீ தான்மா சொன்ன அப்பா பேர் கெடாம பாதுக்கொனு

ஒற்றுமை

பெத்த பொண்ணுக்கும், பரிட்சை பேப்பர்க்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்ன தெரியுமா??

ரெண்டையுமே கட்டி கொடுக்கிறவரைக்கும் ஒரே
டென்ஷன், தலைவலி தான்......

பெத்த பையனுக்கும், பரிட்சை பேப்பர்க்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா??

இரண்டையுமே திருத்தவே முடியாது.......

Tamil Kavithaigal

தான்தான் அழகு என் மார்தட்டிய மலர்களிடம் சண்டையிட்டேன் ஏன் தெரியுமா ?
பெண்ணே உன் புன்னகைக்கு முன்னால்
பூக்கள் எல்லாம் காய்ந்து போன காகிதம்தான் ....................

---------------------------------------------------------------------------------------------------------


வாழ்க்கையை
நாம் துரத்துகிறோம்..
சில நேரங்களில்
வாழ்க்கை
நம்மையே துரத்திவிடுகிறது..

-----------------------------------------------------------


நீயில்லாத அறையில்
மின்விசிறிகூட
விருப்பமில்லாமல்தான்
சுற்றிக்கொண்டிருக்கிறது..

---------------------------------------------------------


தொலைந்து போன
நாட்களைத் தேடித்தேடியே
இருந்த நாட்களும்
தொலைந்து போனது..

-------------------------------------------------


உதாரணமாக மற்றவரை
நாம் சொன்னது போதும்..
மற்றவர் நம்மை
உதாரணமாகச் சொல்ல உழைப்போம்..

-----------------------------------------------------------------


நீ சொல்ல சொல்ல
நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்..
நீ என்ன சொல்கிறாய் எனத்தெரியவில்லை..
நான் என்ன கேட்கிறேன் எனத்தெரியவில்லை..

ஏன்டா சொல் பேச்சு கேட்க்க மட்டுற

அப்பா :ஏன்டா சொல் பேச்சு கேட்க்க மட்டுற ...........

மகன் :நீங்க சொல்லுறதெல்லாம் கேட்க்க முடியாது
இப்ப நானும் சம்பாதிக்கிறேன் ........

அப்பா :உனக்கு நாலு மாடு வாங்கி கொடுத்தது தப்பா போய்டுச்சி ...........
உன்னை எல்லாம் BSC ,BE ,MSC ,MBA ,MCA ன்னு படிக்க வைச்சு தெரு தெருவா அலைய விட்டு இருக்கணும்

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும்
 சிறந்ததாக இருக்க வேண்டும்........
பெண்களுக்கு மட்டுமல்ல ..
.நட்புக்கும் கற்பு உண்டு 
என்றான் ஒரு கவிஞர்....உண்மைதான்
கோபம் ,சிணுங்கள் ,அந்தரங்க தகவல்கள் பகிர்வு ,ஏமாற்றம் 
,மகிழ்ச்சி ,மன்னிப்பு ,துரோகம் இவை அனைத்தையும் தாண்டி
 ஒரு உறவு இருந்தால் அது நட்பு மட்டுமே நிற்கும் ...
.இதற்கு வயது வித்தியாசம் இல்லை ......இதற்க்கு வயதும் இல்லை 
....அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

நண்பர்கள்தின வாழ்த்துக்கள்..!

வாழும் வரை வாழ்கை...!!!
வெல்லும் வரை தோல்வி...!!!
சிரிக்கும் வரை கண்ணீர்...!!!
உதிரும் வரை பூக்கள்...!!!
மறையும் வரை நிலவு...!!!
மரணம் வரை நம் நட்பு...!!!
நண்பர்கள்தின வாழ்த்துக்கள்..!

இனிய தோழமை தின நல் வாழ்த்துக்கள்

"நம் நட்பில்

ஆண்பாலும் இல்லை
பெண்பாலும் இல்லை
மாறாக அது
நாம் இருவரும் கொண்ட
அன்பால் ஆனது"

-கொளஞ்சி

** அனைவருக்கும் இனிய தோழமை தின நல் வாழ்த்துக்கள்"

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

தாயின் அன்பு உதிரத்தால் உருவாகிறது....
நட்பு ஒன்றே எதையும் எதிர்பாராமல் வருகிறது....

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

தெய்வத்தின் மீது செலுத்துவது பக்தி. உற்றார் உறவினர் மீது செலுத்துவது பாசம். பிற உயிர் மீது செலுத்துவது அன்பு. நண்பர்களிடம் நாம் கொண்டிருப்பது நட்பு. நல்ல நட்பில் அன்பும் பாசமும் இருக்கும் . உன்னதமான உயர்ந்த தெய்வீக நட்பில் பக்தியும் இருக்கும்.
என் இனிய நண்பர்களே!
என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Friendship day sms


துடிக்க வைத்து தூக்கி எரியும் காதலை விட 
குடிக்கவைத்து வீட்டுக்கு தூக்கினு போவும் நட்பு சிறந்தது

Friendship day sms

"இவ்வுலகில் ஆயிரம் பூக்கள் பூக்களாம் ஆனால் அது மிக விரைவில் வாடி விடும்.
ஆனால் நட்பு என்ற ஓரு பூ மட்டும் ஓரு முறை பூத்தால் பூத்தது தான் எப்போதுமே வாடாது.இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள் நண்பர்களே.


ஆண்களை அதிக தூரம் நடக்க வைக்கும் இரண்டு விசயங்க

ஆண்களை அதிக தூரம் நடக்க வைக்கும் இரண்டு விசயங்கள்.

ஒண்ணு பிகர்..!

மற்றொன்று சுகர்...!

அறிவாளி பெண்களுக்கு ஒரு அன்பான அறிவிப்பு

அறிவாளி பெண்களுக்கு ஒரு அன்பான அறிவிப்பு ::

160 எழுத்துக்கள் ஒரு SMS என்று கணக்கிடப்படுகிறது.. சும்மா 10 வரிக்கு கதை எழுதுற மாதிரி SMS அனுப்பிட்டு 5 SMSக்கு 3 தான் போச்சு மீதி 2 SMS போகலனு Customercareல போன் பண்ணி டார்ச்சர் பண்ண கூடாது .

தலைக்கு ஹெல்மெட் போடு

தலைக்கு ஹெல்மெட் போடு
இல்லாட்டி உன்ன சுத்தி சாக்பீஸ் கோடு!!
கேர்புல்லா போகணும் டா ரோட்டில்,
உன் பொண்டாட்டி காத்திருப்பா வீட்டில்..
தலை காக்கும் கவசம், தலை கவசம்...
அதை போடலனா, கண்டிப்பா நடக்கும் உனக்கு தெவசம்!

காதல் என்பது தேன்கூடு

‎"காதல் என்பது தேன்கூடு
அதை கட்டி முடிப்பது பெரும்பாடு

*** இது பழையது ***

*** அப்ப புதுசு ***

காதல் என்பது சுடுகாடு
அதில் விழுந்தவர் எல்லாம் எலும்புக்கூடு .................!"

மனைவி எப்படி இருக்க வேண்டும் ? How to be a wife?

மனைவி எப்படி இருக்க வேண்டும் ? How to be a wife?

மனைவி எப்படி இருக்க வேண்டும் ? - என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி.

ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு வந்து சேருகிறாள்.

பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை லயித்து விட்டால், அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடுகிறது.

ஆனால், ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது. அவளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது. அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.

புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள், உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள். எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞர்கள், சேவை செய்வதில் தாசியை போலவும், யோசனை சொல்வதில் மந்திரியை போலவும், அழகில் மகாலட்சுமியை போலவும், மன்னிப்பதில் பூமாதேவியை போலவும், அன்போடு ஊட்டுவதில் அன்னையை போலவும், மஞ்சத்தில் கணிகையை போலவும் உள்ள பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறது வடமொழியில் உள்ள ஒரு சுலோகம்.

பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள் என்கிறார்களே, அந்த மகாலட்சுமியை போன்ற திருத்தமான அழகு அந்த பெண்ணுக்கு இருக்க வேண்டும். அழகு என்றால், முடியை 6 அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, முக்கால் முதுகு பின்னால் வருவோருக்கு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரீக அழகல்ல.

காஞ்சீபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடி கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, மகாலட்சுமி போன்ற அழகு என்கிறார்கள். அத்தகைய பெண், பார்க்கும் போது கூட நேருக்கு நேர் பார்க்க மாட்டாள்.

எந்தவொரு ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீர் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், மகாலட்சுமி போன்ற குலப்பெண்கள் அந்த அதிர்ச்சிக்கு பலியாகி விடுவதில்லை. இடிதாங்கி, இடியை இழுத்து பூமிக்குள் விட்டுவிடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவள் விரட்டி விடுவாள்" என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

மேலும் சில தகுதிகளும் மனைவியாக வரும் பெண்ணுக்கு வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். அவர், பெண்களுக்கு இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் பண்புகள்

கணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க வேண்டும். மாறாக, அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.

அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய் போல் இருக்க வேண்டும்.

பள்ளியறையில் அவள் கணிகையை போலவே நடந்து கொள்ள வேண்டும். அதாவது, கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்து உள்ளவளாக இருக்க வேண்டும்.

மீண்டும், மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு ஏற்பட வேண்டும்.

- இப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டவன் பெரும்பாலும் கெட்டுப் போவதில்லை; வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை என்கிறார் கண்ணதாசன்.

நல்ல பெண்ணை மணந்தவன் முட்டாளாக இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்றும் கூறும் கண்ணதாசன், தவறான பெண்ணை ஒருவன் மனைவியாக்கிக் கொண்டாள் அவன் அறிஞனாக இருந்தாலும் முட்டாளாகி விடுகிறான், அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது என்றும் கூறுகிறார்.

சரி... நல்ல பெண்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதற்கும் அவரே ஐடியா தருகிறார்.

தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளை படிக்கட்டில் பார்க்க வேண்டாம் என்பார்கள். இதேபோல், தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்பார்கள். அதாவது, தாயைப் போல் தான் அவளது மகளும் இருப்பாள் என்பது இதன் அர்த்தம். இன்றைய இளைஞர்கள் பெண்ணின் தாயை பார்ப்பது இல்லை. மனைவியாக வரும் பெண்ணின் வாளிப்பான அங்கங்களே அவனது நினைவை மயக்குகின்றன. இதனால் தான் பெற்றோர் பார்த்து மகனுக்கு பெண் தேட வேண்டும் என்கிறார்கள்.

பெற்றவர்கள் பெண் பார்க்கும் போது, பெண்ணின் குலம், கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்த பிறகுதான் பேசி முடிக்கிறார்கள். இத்தகைய நிதானமாக அறிந்து முடிக்கப்பட்ட திருமணங்கள், 100க்கு 90 சதவீதம் வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.

ஆத்திரத்தில் காதல், அவசரத்தில் கல்யாணம் என்று முடிந்த திருமணங்கள், 100க்கு 90 தோல்வியே அடைந்திருக்கின்றன. ஆகவே, ஆயுட்கால குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும் என்றால், பெண் தேடும் பொறுப்பை பெற்றோர்களிடமே விட்டுவிட வேண்டும்"என்கிறார் கண்ணதாசன்.

தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம்
எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது....

காதலிக்க ஒரு ஆணுக்கு முக்கியமாக இருக்கவேண்டிய தகுதிகள்

காதலிக்க ஒரு ஆணுக்கு முக்கியமாக இருக்கவேண்டிய தகுதிகள் :-

♣- ► நிச்சயமா நல்லவனா நடிக்க தெரியணும்

♣- ► நிறைய பொய் சொல்லணும்

♣- ► நண்பர்களுடன் இருக்கும் நேரத்தை இழக்க தயாரா இருக்கணும்

♣- ► நிறைய மொக்கை ஜோக்ஸ் தெரியணும்

♣- ► பொண்ணுங்க போடுற மொக்கைய தாங்கிக்கிற நல்ல மனசு வேணும்

♣- ► பொண்ணுங்க என்னதான் தப்பு பண்ணினாலும் கண்டுக்காத நல்ல மனசும் அவசியம்

♣- ► காதலிக்கும் பொண்ணுக்கு பிடிச்ச கலர் ..நடிகர் ..நடிகை .. பாட்டு எல்லாவற்றையும் உங்களுக்கும் பிடிக்கிறது போல மனச மாத்திக்கணும்

♣- ► நைட்டில கண் முழிக்க தயாரா இருக்கணும் ..

♣- ► மொபைல்க்கு பில் கட்ட /ரீச்சார்ச் பண்ண லம்பா ஒரு அமவுண்ட் ரெடி பண்ணனும் ...

அடி வாங்கும் உடல் திறன் மிக அவசியம்
(அவளுக்கு அண்ணன் இருந்தா /அப்பா ரவுடியா இருந்தா )

♣- ► இத்தனையும் நாம பண்ண அவங்க லாஸ்ட்ல டாட்டா காட்டிட்டு இன்னொரு பையனை கலியாணம் பண்ணி போகும் போது
"எங்கிருந்தாலும் வாழ்க " பாட்டு கண்டிப்பா பாடனும் ...
அந்த மனசுதான் வெரி இம்போர்டேன்ட் ...

♣- ► நிச்சயமா ஒரு டைலாக் மனப்பாடம் பண்ணனும் .......

♣- ► "திரிஷா இல்லன்னா திவ்யா..போடி போடி ... "








காதலிக்க பொண்ணுங்களுக்கு ஒரே ஒரு விஷயம் போதும் ...

♣- ► "லைட்டா முகத்தை சாய்ச்சு ஒரு கடைக்கண் பார்வை ... அம்புட்டும்தான் ..பையன் அவுட்

( ♣- ► பெண்களுக்கு முக்கிய குறிப்பு :- "என்னை போல " ஆளுங்க இந்த டகால்டி வேலைக்கெல்லாம் செட் ஆகமாட்டம்.. வீணா ட்ரை பண்ணி நேரத்தை வேஸ்ட் பண்ணாதிங்க )